Monday, September 14, 2009

வாழ்க்கை

அலை அடித்து துவைத்ததில் சாயம் போயிருக்கிறது என் சட்டை!
கறையில் நிற்பவர்கள் சிரிக்கிறார்கள்....
கையில் ஸமோஸாவுடன்!

என் உள்ளங்கையில் இருக்கிப் பிடித்திருக்கிறேன்
இரண்டு முத்துக்களை!

கொஞ்ச நேர பெருமைக்குப் பின் பசி எடுக்க - இதோ...
முத்துக்களை விற்று ஸமோஸா வாங்கப் பொகிறேன்

அங்கேச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள்...
எதனை விற்று ஸமோஸா வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது!

No comments: