Saturday, August 27, 2011

My Sunshine Poem

Walking down the Rivulet road
My heart was going your way
The squirrels were singing to the woad
But I had nothing to say

The daisies were dancing there
Though none bothered to care
On sight of it, I thought of you
My lovely charming flower!

Look at you my angel thing
Let the poet in me survive...
Your smile is so bewitching
That makes my day alive

Open your eyes, let the darkness fade
Drive away the rain
Bring back luck through an escapade
Oh my beautiful sunshine!

Sunday, February 6, 2011

நீண்ட பயணமும் ஒரு நிழற்சாலையும்!

வெவ்வேறான நமது பயணங்களில்
நாம் இணைந்து கடக்கும் இந்த நிழற்சாலை
இன்னும் கொஞ்சம் நீண்டால் என்ன?

முக்கால் உண்மையாய் மீதம் போலியாய்
தொடர்கிறேன் நான்
என்னுள் நிஜத்தை மட்டும் ப்ரதிபலிக்கும்
நிலைக்கண்ணாடி நீ

இளகிக் கரையும்,
பொய்மையில் உறைந்த இதயம்,
உன் உண்மையின் வெப்பத்தில்.

பாசம் பரிவு அக்கறை தோழமை...
அதனினும் உன்னதம்,
நீ நிஜம்!

அரிதாரம் சூடாத உன் பேச்சின் பற்றுதலில்..
அதிகாரமான அன்பில், அரவணைப்பில்
வேகம் கூட்டித் நகர்கின்றது என் யாத்திரை

இந்தச் சாலைக் கடக்கப்படும் -
உன் துணையோடு!

தொடர்ந்து கொண்டே இருக்கும் என் முடிவறியா யாத்திரை...
மீண்டும் ஒரு நிழற்சாலைக் கடந்தபடி..

என் பயணம் மீண்டும் தளரக்கூடும்!
என் தனிமை என்னைத் தின்னக்கூடும்!
உண்டு உயிர்த்து உறங்கி நடந்து
விழித்து களைத்த பொழுதுகளெல்லாம்
நிஜங்களைத் தேடி அலையக்கூடும்..

அன்றும் உன்னை நினைத்துக் கொள்வேன்
என் விழிகளைக் கொஞ்சம் நனைத்துக் கொள்வேன்